மீனவ கூட்டுறவு சங்கங்களிலிருந்தும் தலா ஒவ்வொரு வறிய மீனவ குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவி – 2024 (SDG Goals)

காரைநகர் பிரதேச சபையினால் 16.04.2025 அன்று நிலைபேறான அபிவிருத்தி இலக்குகள் – 2024 (SDG) திட்டத்தின் கீழ் காரைநகரில் இயங்குகின்ற 9 மீனவ கூட்டுறவு சங்கங்களிலிருந்தும் தலா ஒவ்வொரு வறிய மீனவ குடும்பம் என்ற அடிப்படையில் தெரிவு செய்யப்பட்டு வாழ்வாதார உதவியாக ரூபா 100,000.00 பெறுமதியான வலை மற்றும் மீன்பிடி உபகரணங்கள் வழங்கப்பட்டன.

See insights

Boost a post

நிலை பேறான அபிவிருத்தி இலக்குகள் 2024 – (SDG Goals) – பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள்

காரைநகர் பிரதேச சபையினால் நிலைபேறான அபிவிருத்தி இலக்குகள் (SDG) நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் பாடசாலை மாணவர்களுக்கு உதவி வழங்கும் திட்டத்தில் யா/ காரை ஊரி அமெரிக்கன் மிஷன் தமிழ் கலவன் வித்தியாலய தரம் 5யை சேர்ந்த 26 மாணவர்களுக்கு பாடசாலை கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்ட போதான சில பதிவுகள்

காரைநகர் பிரதேச சபை உள்ளூராட்சி வாரத்தை – (2024) முன்னிட்டு நடைபெற்ற கரப்பந்தாட்ட போட்டி

காரைநகர் பிரதேச சபை உள்ளூராட்சி வாரத்தை – (2024) முன்னிட்டு, 26.03.2025 காரைநகர் பிரதேச விளையாட்டு கழகங்களுக்கு இடையேயான விறுவிறுப்பான கரப்பந்தாட்ட போட்டி கலாநிதி விளையாட்டு கழக மைதானத்தில் காலை 9.00 மணிக்கு நடைபெற்றது. இப்போட்டியில் இளஞ்சுடர் விளையாட்டுக்கழகம், அம்பாள் விளையாட்டுக்கழகம், இளந்தென்றல் விளையாட்டுக்கழகம், கோவளம் விளையாட்டுக்கழகம், கலாநிதி விளையாட்டுக்கழகம் மற்றும் காரை சலஞ்சேர்ஸ் விளையாட்டுக்கழகம் என்பன பங்கேற்றன. இறுதிப்போட்டிக்கு இளஞ்சுடர் விளையாட்டுக்கழகம் மற்றும் இளந்தென்றல் விளையாட்டு கழகம் தகுதி பெற்றதுடன் சிறப்பாக விளையாடிய இளந்தென்றல் விளையாட்டு கழகம் வெற்றி வாகை சூடியது. போட்டித் தொடரில் வெற்றி பெற்ற அணிகளுக்கும், கலந்து கொண்ட அனைத்து அணிகளுக்கும் எமது மனமார்ந்த வாழ்த்துக்கள்! இந்த போட்டித் தொடரை வெற்றிகரமாக நடத்தி முடிப்பதற்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் எமது நன்றிகள்.

தற்போதைய அரசாங்கத்தின் கொள்கை பிரகடனமான Clean Sri Lanka செயற்திட்டத்தின் கீழ் கசூரினா சுற்றுலா மையம் தூய்மைப்படுத்தும் சிரமதான பணி

முதல்கட்டமாக கசூரினா சுற்றுலா மையம் தொடக்கம் தூம்பில்பிட்டி எல்லை வரையிலான சுமார் 2.5Km தூரமான கடற்கரை பரப்பில் 06.02.2024 அன்று காலை 8.30 மணி தொடக்கம் 11.00 மணி வரை கசூரினா கடற்கரையை தூய்மைப்படுத்தும் பணி செயலாளர் தலைமையில் இடம்பெற்றது. இவ் சிரமதான பணிக்கு Save a Life நிறுவன அனுசரனை வழங்கியுள்ளதுடன் சிரமதான பணியில் காரைநகர் பிரதேச சபை உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்கள், இலங்கை தரைப்படை காரைநகர், இலங்கை கடற்படை காரைநகர், சனசமூக உத்தியோகத்தர், சனசமூக நிலைய அங்கத்தவர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்கள், இலங்கை தொழிற்பயிற்சி அதிகாரசபை உத்தியோகத்தர்கள் மற்றும் மாணவர்கள், கமக்கார அமைப்புக்கள், கடற்தொழிலாளர்கள் சங்கங்கள் மற்றும் நலன்விரும்பிகள் என்போர் உள்ளடங்கலாக 200 பேர் வரை பங்குபற்றினார்கள். இவ் சிரமதான பணியில் இந்தியா, மலேசியா, சிங்கப்பூர், சீனா நாடுகளின் பிளாஸ்டிக் மற்றும் கண்ணாடி போத்தல்கள் என்பனவும் தூய்மை பணியாளர்களால் சேகரிக்கப்பட்டதுடன் வயது வேறுபாடு இன்றியும் பணியில் ஈடுபட்டார்கள் மற்றும் சிரமதான பணியின் மூலம் 2000 KG (2 Ton) மதிப்பிடும் அளவிலான திண்மக்கழிவுகள் சேகரிக்கப்பட்டதுடன் அவ்விடத்திலே தரம் பிரிக்கப்பட்டு வாகனங்களில் கொண்டு செல்லப்பட்டன. இப் Clean Sri Lanka.. பணியில் பங்குபற்றிய அனைவருக்கும் எமது மனமார நன்றியை தெரிவித்துக்கொள்கின்றோம்.

செயலாளர்,உத்தியோகத்தர் மற்றும் ஊழியர்கள், பிரதேச சபை, காரைநகர்.

பாடசாலை மட்டத்தில் வீட்டுத்தோட்டத்தை ஊக்குவித்தலுக்கான மரக்கறி கன்றுகள் வழங்கல்

பாடசாலை மட்டத்தில் வீட்டுத்தோட்டத்தை ஊக்குவிக்கும் முகமாகவும் வீட்டுத்தோட்டத்தில் மூலம் கிடைக்கும் மரக்கறிகளை தாமே பயன்படுத்தவும் வீடுகளில் தாமே மரக்கறி கன்றுகளை வளர்தல் தொடர்பான ஆசிரியர் வழிகாட்டல் என்பவற்றை பெறும் நோக்கத்தோடும் மரக்கறி கன்றுகள் காரைநகர் பிரதேச பாடசாலைகளுக்கு வழங்கப்பட்டன. 11 பாடசாலைகளான சுந்தரமூர்த்தி வித்தியாசாலை, சுந்தரமூர்த்தி வித்தியாசாலை ஆரம்ப பாடசாலை, வியாவில் சைவவித்தியாசாலை, ஆயிலி சைவஞானோதய வித்தியாசாலை, மெய்கண்டான் வித்தியாசாலை, ஊரி அ.மி.த.க சைவ வித்தியாசாலை, தோப்புக்காடு மறைஞான சம்பந்தர் வித்தியாசாலை, வலந்தலை வடக்கு அ.மி.த.க வித்தியாசாலை, வலந்தலை தெற்கு அ.மி.த.க வித்தியாசாலை, வேரப்பிட்டி ஸ்ரீகணேசா வித்தியாசாலை, சுப்பிரமணிய வித்தியாசாலை என்பவற்றுக்கு கத்தரி கன்றுகள், தக்காளி கன்றுகள், மிளகாய் கன்றுகள் தலா 15 என்ற வீதம் 495 கன்றுகளும் 2 பாடசாலைகள் ஆன காரைநகர் இந்துக்கல்லூரி மற்றும் யாழ்ற்ரன் கல்லூரி என்பவற்றுக்கு கத்தரி கன்றுகள், தக்காளி கன்றுகள், மிளகாய் கன்றுகள் தலா 25 என்ற வீதம் 150 கன்றுகள் வழங்கப்பட்டன. அத்துடன் அவற்றுக்கு தேவையான 500 KG நிறை கொண்ட கூட்டெருக்கள் மற்றும் 850 பைகள் 13 பாடசாலைகளுக்கு பங்கிடப்பட்டன.