காரைநகர் கடற்கரையோர “நெகிழி” அகற்றல் செயற்பாட்டில் அரச திணைக்களங்கள் ஒன்றிணைவு.

மாகாண ஆளுநர் அவர்களின் அறிவுறுத்தலுடனான கடற்கரையோர கழிவுகளை அகற்றும் செயற்பாடு காரைநகர் கோவளம் கடற்கரையில் இன்று(04:04:2024) காலை 8:00மணியளவில் முன்னெடுக்கப்பட்டது.

இச் செயற்பாட்டில் காரைநகர் பிரதேச செயலக உத்தியோகத்தர்களும் சபையின் உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்களும் ,கரையோரப் பாதுகாப்பு திணைக்கள உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இவ் கழிவுகளை அகற்றும் செயற்பாட்டில் பெருமளவு பிளாஸ்டிக்(நெகிழி) கழிவுகள்,கண்ணாடிப் போத்தல் என்பன சேகரிக்கப்பட்டு சபையின் திண்மக்கழிவுகள் தரம்பிரிக்கும் நிலையத்திற்கும் எடுத்துச் செல்லப்பட்டன.

இச் செயற்பாடு பொதுமக்கள்,மற்றும் சமூக அமைப்புக்களிடையே கழிவுகள் தொடர்பான விழிப்புணர்வினை ஏற்படுத்தக் கூடியதாக அமைந்தது எனலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *