பாடசாலை மட்டத்தில் வீட்டுத்தோட்டத்தை ஊக்குவித்தலுக்கான மரக்கறி கன்றுகள் வழங்கல்

பாடசாலை மட்டத்தில் வீட்டுத்தோட்டத்தை ஊக்குவிக்கும் முகமாகவும் வீட்டுத்தோட்டத்தில் மூலம் கிடைக்கும் மரக்கறிகளை தாமே பயன்படுத்தவும் வீடுகளில் தாமே மரக்கறி கன்றுகளை வளர்தல் தொடர்பான ஆசிரியர் வழிகாட்டல் என்பவற்றை பெறும் நோக்கத்தோடும் மரக்கறி கன்றுகள் காரைநகர் பிரதேச பாடசாலைகளுக்கு வழங்கப்பட்டன. 11 பாடசாலைகளான சுந்தரமூர்த்தி வித்தியாசாலை, சுந்தரமூர்த்தி வித்தியாசாலை ஆரம்ப பாடசாலை, வியாவில் சைவவித்தியாசாலை, ஆயிலி சைவஞானோதய வித்தியாசாலை, மெய்கண்டான் வித்தியாசாலை, ஊரி அ.மி.த.க சைவ வித்தியாசாலை, தோப்புக்காடு மறைஞான சம்பந்தர் வித்தியாசாலை, வலந்தலை வடக்கு அ.மி.த.க வித்தியாசாலை, வலந்தலை தெற்கு அ.மி.த.க வித்தியாசாலை, வேரப்பிட்டி ஸ்ரீகணேசா வித்தியாசாலை, சுப்பிரமணிய வித்தியாசாலை என்பவற்றுக்கு கத்தரி கன்றுகள், தக்காளி கன்றுகள், மிளகாய் கன்றுகள் தலா 15 என்ற வீதம் 495 கன்றுகளும் 2 பாடசாலைகள் ஆன காரைநகர் இந்துக்கல்லூரி மற்றும் யாழ்ற்ரன் கல்லூரி என்பவற்றுக்கு கத்தரி கன்றுகள், தக்காளி கன்றுகள், மிளகாய் கன்றுகள் தலா 25 என்ற வீதம் 150 கன்றுகள் வழங்கப்பட்டன. அத்துடன் அவற்றுக்கு தேவையான 500 KG நிறை கொண்ட கூட்டெருக்கள் மற்றும் 850 பைகள் 13 பாடசாலைகளுக்கு பங்கிடப்பட்டன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *