சபையின் செயற்பாட்டினை வினைத்திறனாக்கும் முகமாக சுகாதார ஊழியர்களுக்கான பாதுகாப்பு உடையுடன் களச்செயற்பாட்டில் ஈடுபட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
உள்ளூராட்சி கட்டமைப்பில் சுகாதாரப் பணியாளர்கள் திண்மக்கழிவகற்றல் மற்றும் துப்பரவுப்பணி என்பன முக்கிய துறைகளாக விளங்குகின்றது. சபையின் செயற்பாட்டிற்கு சுகாதார தொழிலாளர்களின் அர்ப்பணிப்பு மிக்க பணி அவசியமாகின்றது.
எனவே சுகாதார ஊழியர்கள் நலன் மற்றும் பாதுகாப்பிற்காக பாதுகாப்பு உடை வழங்கப்பட்டுள்ளது.
இவ் உடையினை
Save a live நிறுவனம் வழங்கியுள்ளதுடன் தினமும் பாதுகாப்பு உடையுடன் பணியாற்றுவதற்கான ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இவ் உடையினை வழங்கிய Save a live நிறுவனத்திற்கு நன்றியினைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
